முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லையென அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உக்குவெளை - குரிவெல பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசச்சாரக் கூட்டத்தில கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் முன்பு முஸ்லிம் பெண் ஒருவருடன் காதல் கொண்டிருந்தேன். இதனால் முஸ்லிம்களுடன் எனக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. அந்த முஸ்லிம் பெண்னை திருமணம் செய்ய எண்ணியிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லை.
ஏனைய இன மக்களின் உரிமைகளை நான் மதிக்கிறேன். சகல இனத்தவரினதும் நலனிலும் அக்கறை கொண்டுள்ளேன் எனவும் இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment