சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, August 30, 2013

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் ஐவர் கட்சியிலிருந்து நீக்கம்

By on 5:10 AM
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பிணர்கள் ஐவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.

நேற்றைய தினம் இரவு முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஒன்று கூடியது. அண்மையில் கட்சியிலிருந்து பிரிந்து மாகாண சபைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரே இதன்போது உயர்பீட உறுப்பினர்களின் சம்மதத்துடன் நீக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண சபைத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் போட்டியிடும் மில்ஹான்,  அணீஸ்தீன், முனாஜித், நஜாத் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் அரசாங்க கட்சியில் போட்டியிடும் ஹெயியா ஆப்தீன் ஆகியோரே இவ்வாறு கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக ஹஸனலி எம்.பி. தெரிவித்தார்.

0 comments:

Post a Comment