தெல்தொட்டை முஸ்லிம் கொலனியைச் சேர்ந்த பாஹிம் எனும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டிருப்பதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
பாஹிம் எனும் இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை பாஹிம் தூங்கிக் கொண்டிருந்த போது, அவனது மாமாவினால் (தந்தையின் சகோதரியின் கணவர்) பெரிய கல் ஒன்றை பாஹிமின் தலையில் போட்டதாலேயே பாஹிம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராரே இக் கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக தெல்தோட்டை பிரதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளது.
குறித்த சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment