சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, January 3, 2014

சுமார் 70 அடி உயரத்திற்கு மனிதனை அழைத்து சென்ற மரண நிகழ்வு அதிரவைத்தது தெல்தோட்டையை.

By on 7:26 AM


                        தெல்தோட்டை முஸ்லிம் கொலனியை சேர்ந்த பாஹிர் (பாய்) என்பவர் தனது வழமையான தொழிலாக மரங்களில் ஏறி பப்பாசி, பழாபழம், மாம்பழம், , போன்ற பழங்களை பறித்து அதனை விற்பனை செய்து தனது ஜீவியத்தை நடாததிவருகின்றவர் அவர் 2014-01-01ம் திகதி 04.00 மணியளவில் முஸ்லிம் கொலனி சந்தியில் உள்ள ஒரு வீட்டில் மாம்பழம் பறிப்பதற்கான அவர்களிடம் அனுமதிகோரி மரத்தில் ஏறிய பாஹிர் (பாய்) அவர்கள் இரவு 7.00 மணியளவில் சடலமாக மரத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு விசித்திரமான நிகழ்வு தெல்தோட்டையில் ஏற்பட்டது.





                  குறிப்பிட்ட நபர் 4.00 மணியளவில் மரத்தில் ஏறி பழங்களை பறித்துவிட்டு அதனை கொண்டு சென்று வைத்தவிட்டு மீண்டும் மரத்தில் ஏறி பழங்களை பறிக்கும் மரத்தின் கால்கள் சறுக்கியதால் தனது இறு கால் கிடைகளுக்கிடையில் அடிப்பட்டதால் உயிர் இழந்ததாக கலஹா பொலிஸ் நிலையத்தின் விசாரனைகளை அடுத்து அறியகிடைத்தது. விசாரனைகளின் முடிவில் ஜனாஸா குடும்பத்தினர்களுக்கு 9.00 மணியளவில் கையளிக்கப்பட்டது.
                இவரின் ஜனாஸா நல்லடகம் மறுநாள் காலை 11.00 தெல்தோட்டை முஸ்லிம் கொலனி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் -தெல்தோட்டை நகர செய்தியாளர் ஆர்.எம். ரிஸ்வான்






0 comments:

Post a Comment