சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, September 20, 2013

பாடசாலை மாணவியுடன் விடுதியில் இருந்த பிக்கு பொலிஸாரிடம் சிக்கினார்

By on 3:19 AM

அனுராதபுரம் ஸ்ரவஸ்திரபுர பகுதியில் உள்ள விடுதியொன்றை சுற்றிவளைத்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பௌத்த பிக்கு ஒருவரையும் இளம் பாடசாலை மாணவியையும் கைது செய்துள்ளனர்.


19 வயதான பௌத்த பிக்கும் 17 வயதான பாடசாலை மாணவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிக்குவும் பாடசாலை மாணவியும் சுமார் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட பிக்கு கெக்கிராவை மரதன்கடவல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் என பொலிஸார் கூறினர்.


அதேவேவளை பிக்குவுக்கும் மாணவிக்கும் தங்குமிடத்தை வழங்கிய விடுதியின் உரிமையாளரை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment